Saturday, 21 September 2013

நாங்கள் உணர்வினை இழக்கவில்லை....

ஒரு விடுதலைப் போராட்ட வரலாற்றை ஓரிரு ஆண்டுக்குள் அழித்துவிட்டு  தமிழர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறிய சிங்கள அரசுக்கு கடந்த பல சகாப்தமாக விடுதலைக்காக ஏங்கித் தவிக்கும் எம்  இனத்துக்கு…. தொடர்ச்சியான அடக்குமுறைக்கும்…. அடிமைத்தனத்திற்கும் பலியாகிக் கொண்டிருக்கும் என் சமூகத்துக்கு    எத்தனை சலிப்பும், எத்தனை எரிச்சலும், எத்தனை ஏமாற்றமும் இந்த இனவாத அரசு மேல் இருந்து இருக்கும் ?

இன்று ஈழமக்களின் தலைமைபீடம் இல்லாத நிலையில் யாரை நம்புவது என்பது தெரியாமல் இருந்த மக்கள் இன்று தமிழ் தேசியத்தை வெல்ல வைத்திருப்பதன் மூலம் நாம் சிங்களத்தின் அதனூடு சேர்ந்து இயங்கிய ஒட்டு குழுக்களுக்கும் அடிபணியாது அவர்கொடுக்கின்ர அற்ப சொற்ப்ப சலுகைகளுக்கு அடிபணியாது மக்கள் இன்று மிகப்பெரிய அரசியல் வெற்றியை ஈட்டி இருக்கிறார்கள் நாங்கள் இன்னும் உணர்வோடுதான் இருக்கிறோம் என்பதை உலகுக்கு பறைசாற்றி உள்ளது

எனக்கு தெரிந்து ஊர்காவற்துறை தேர்தல் தொகுதியில் விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் கூட இவ்வாறு வெற்றி பெற்றது கிடையாது அது EPDP கோட்டை எனசொல்லப்பட்டது இன்று நிலைமை தலைகிழ் இன்று ஒட்டு மொத்த தமிழ் இனத்தின் வேண்டுதல் உரிமை என்பதுதான்

இன்று இலங்கை அர­சாங்­க­மா­னது சர்­வ­தே­சத்தின் முன்னால் குற்­ற­வாளிக் கூண்டில் நிறுத்­தப்­பட்­டுள்­ளது. தமிழர்கள் கேட்பது உரிமை எங்களை நாங்கள் ஆளும் வாழ்க்கை என்பதை இப்போது சர்வதேசம் புரிந்து இருக்கும்  இந்தச் சந்­தர்ப்­ப­மா­னது இலங்­கையில் தமிழ்த் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வை அடை­வ­தற்­கான இரா­ஜ­தந்­திரசந்­தர்ப்­ப­மா­கவும் வடக்கு உட்­பட தமிழ்­பேசும் மக்கள் தேசத்தில் இரா­ணுவ ஆக்­கி­ர­மிப்­பையும் ஆதிக்­கத்­தையும் ஒழிப்­ப­தற்­கான சிறந்த சந்­தர்ப்­ப­மா­கவும் அமைந்­துள்­ளது.
இன்று வெற்றி   பெற்றவர்கள் அதற்கான வழிமுறைகளை கையாண்டு எங்கள் நம்பிக்கையை காப்பாற்றுவீர்கள் என நம்புகிறோம்
இரத்தம் சிந்தப்பட்ட மண்ணில் அதன் வடுக்கள் ஆறும் முன்னே தமிழ் மக்கள் இன்னோர் முறை எமக்கான உரிமையை சர்வதேசதிட்க்கு பறை சாற்றி உள்ளார்கள் சர்வதேசம் இந்த சந்தர்பத்தையும் தட்டி கழிக்காமல் தமிழர்களுக்கான உரிமைகளை பெற்று தர வேண்டும்

விடுதலைப்புலிகள் இருந்தகாலத்தில் அவர்களை பயங்கரவாதிகள் என்று புறம்தள்ளி எம் மக்களையும் எம் விடுதலை போராட்டத்தையும் அழித்த உலக சமுதாயம் இம்முறை எம்மால் எம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட எங்களின் அரசியல் தலைவர்களோடு கலந்து பேசுவதில் எந்த இடர்பாடும் இருக்க போவதில்லை எனவே எமக்கான உரிமை இந்த தேர்தல் மூலம் உலக்குக்கு உணர்த்தப்பட்டுள்ளது





Friday, 13 September 2013

நாசமா போன தமிழ்த்தேசிய பித்தலாட்டங்கள்

கணவன் மனைவி பிரச்சினையில் அயலவர்(தமிழகம்) தலையீடு செய்ய வேண்டியதில்லை – விக்னேஸ்வரன் இந்திய ஊடகத்திற்கு பேட்டி....

நாசமா போன தமிழ்த்தேசிய பித்தலாட்டங்கள்   இந்த கணவன் மனைவி பிரச்சனைக்குதான் இதனை வருடகாலம் எங்கள் உடன்பிறப்புகளையும் மன நின்மதியையும்  குடும்பத்தோடு ஒன்றாக இருந்த நாட்களையும் தொலைத்தோம்...

.இன்று ஒவ்வருதேசதிலும் நம் இருப்புக்காக பரதேசியாய் அலையும் ஒரு கூட்டமாக  சொந்தமண்ணிலே வாழமுடியாமல் அன்றாட வாழ்க்கைக்கு கூட வக்கற்ற நிலையில் இருக்கிறோம்...இது எல்லாம் எதற்காக  தம்மைச் சூழவர உள்ள சமூகம் ஒடுக்கப்படுகிறது என்று உணர்ந்துகொண்டவர்கள் அந்த ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடவே இணைந்துகொண்டார்கள்

.இன்று எமக்கான தேசமும் இல்லை எமக்கான தலைமைத்துவமும் இல்லை என்ற நிலையில் தமிழ் தேசியம் சின்னபின்னமக்கப்பட்டுள்ளது...இப்படி கேலி கூத்தாடிகள் ஈழ அரசியல் களத்தில் இதனை வருடமும் அந்தமண்ணில் சிந்தப்பட்ட இரத்தத்தோடு கலந்துவிட்ட கண்ணீரை மாசுபடுத்து கின்றனர்...

அன்று ஐயா சம்பந்தன் சிங்கள கொடி ஏந்தினார் .அதன்முலம் நாங்கள் தேசியத்தின் மீது வைத்திருந்த உணர்வை மழுங்கடித்தார் பின்னர் தன்னை புலிகள் ஒருமுறை கொல்ல நினைத்ததாக புலம்பினார்(விட்டது புலிகளின் பிழை)..அன்று நாங்கள் இவர்களின் மிது வைத்திருந்த நம்பிக்கையை துக்கி எறிந்தார்

இதனை நடந்தும் ஈழமக்கள் உங்களை ஆதரிக்க வந்தோம் காரணம் எங்கு சுற்றியும் எமக்கு ஒரு நிறைவான தேசிய தலைமப்பிடம் கிடைக்கவில்லையே என்ற அதன்கதொடு...பின்னர் உங்கள் கட்சி தெரிவில் எங்களை ஏமாற்றி விட்டிர்கள்
முன்னால் உங்களால் துரோகி,ஒட்டுகுழு என்று முத்திரை குத்தப்பட்ட சித்தார்த்தன்,ஆனந்தசங்கரி இப்போது உங்களின் தோழர்கள் ஆகிவிட்டனர்...
இன்று அவர்களுக்கு ஒட்டு பிச்சை கேட்கிறிர்கள் ஏன்  டக்கர் ஐயவை  விட்டுவிட்டிர்கள்..

நிங்கள் மறந்து இருப்பிர்கள் இல்லை உங்களுக்கு பதவி அசையும் பணத்தாசையும் மழுங்கடித்து இருக்கும் நாங்கள் எப்படி மறப்பது எங்கள் உடன்பிறப்புகள் என் நண்பர்கள் எங்கள்  குடும்பங்கள் சிதைந்ததை...
இன்று கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் (சிங்களவனின் மனுசியோ இல்ல கணவனோ உங்களுக்குதான் தெரியும்)கூறிய கருத்து கூடமைப்பின் ஒட்டு மொத்த நம்பிக்கையையும் சிதைத்து இருக்கிறது உங்கள் கணவன் மனைவி சண்டைக்க அதனை சகோதர சகோதரிகள் தியில் வெந்தார்கள்,சிறையில் வாடினார்கள்

உங்களால் எமதுவிடுதலைப்  போராட்டத்தினையும் அதற்கு ஆதரவாக  எழுந்த போராட்டத்தினையும்  புரிந்து கொள்ள முடியாது என்பது கவலைக்குரியவிடயம். ஆனால் அதை நிங்கள்  கொச்சைப்படுத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. விடுதலை புலிகளின் காலத்திலும் இப்பொழுதும் தமிழகமக்களின்  ஆதரவுடன் தான் ஈழமக்கள் ஓரளவேனும் நின்மதியாக இருக்கிறார்கள்  ...புலம்பெயர்ந்து வாழும் ஈழமக்களை விட தமிழக இன உணர்வாளர்கள் எம் விடிவுக்காக போராடி கொண்டு இருக்கிறார்கள் அது உங்களுக்கு தெரியாமல் இல்லை

ஐயா சிங்களவனின் சம்பந்தி நிங்கள் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் மக்கள் எமது பலத்தை நிருபிப்பதட்ககவே உங்கள் தேசிய கூட்டமைப்பினை ஆதரிக்கிறார்கள் நிங்களும் எமது சக்தியை வெளிஉலகுக்கு காட்டுவதற்க்கு வோட்டு போடுங்கோ என்று கேட்டு வருகிறிர்கள்    இதைதான் எல்லா தேர்களிலும் சொல்லி வருகிறிர்கள்...இருந்து ம் உங்களின் திருகுதாளங்கள் எமக்கு தெரியாமல் இல்லை.......ஈழமண்ணில் விதைக்கப்பட்டு இருக்கும் அந்த மகத்தான ஆன்மாக்கள் உங்களை ஒருபோதும் மன்னிக்காது...

Monday, 22 July 2013

கறுப்பு யூலை

துயரம் தோய்ந்த நம் ஈழத்தமிழினம் தன் வரலாற்றில் யூலை 83 இற்கு முன்னும் பின்னும் எத்தனையோ ஆயிரம் கோர இறப்புக்களை, சொத்துடமை இழப்புக்களைச் சந்தித்திருக்கின்றது, சந்தித்து வருகின்றது. சொல்லப் போனால் யூலை 83 இனை ஒவ்வொரு நாளும் நம் தமிழர் தாயகம் சந்தித்து வரும் வேதனை முடிவிலாத் தொடர்கதை.......


இலங்கைத்தீவில் இரு இனங்களுக்கு இடையே என்ன நடக்கிறது என்று இந்த உலகம் புரிந்திராத, அறிந்திராத காலத்தே பௌத்த சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களால், தமிழ் இனத்திற்கு எதிராக நடத்தி முடிக்கப்பட்ட கொடூரமான காட்டுமிராண்டித்தனமான இனச்சங்காரமே கறுப்பு யூலை.


சிங்கள ஆட்சிபீடத்தின், நன்கு திட்டமிட்ட நடவடிக்கையாக, அரங்கேற்றப்பட்ட இந்தக் கொடுமைக்கு பல்லாயிரம் தமிழர்கள் பலியாக்கப்பட்டனர்.
தமது கடுமையான உழைப்பால் தமிழர்கள் சேர்த்துவைத்த வளங்களை, செல்வங்களை, சொத்துக்களை, சிங்களக் காடையர்கள் கொள்ளையிட்டனர். தீவைத்து மகிழ்ந்தனர். தமிழ்மக்களின் பொருளாதார வளம் முற்றாக அழிக்கப்பட்டது.
சொத்துக்களையும் சொந்தங்களையும் இழந்து, தென்பகுதியில் இருந்தும், மலையகப் பகுதிகளில் இருந்தும் தமிழர்கள், தமது தாயகம் நோக்கி அகதிகளாக விரட்டப்பட்டனர்.
எமக்கென்றோர் தாயகம் உண்டென்ற உண்மை வெளிப்பட்ட தருணம் அது. துன்பதுயரங்களுடன், உடல்காயங்களுடனும் மனக்காயங்களுடனும் வந்த தனது மக்களை, தமிழர் தாயகம், வரவேற்று மருந்திட்டது, உணவிட்டது. ஆதரவாய்த் தாங்கியது.
பல்லாயிரக்கணக்கானோர், இலங்கைத் தீவைவிட்டு, இந்தியாவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் அகதிகளாக வெளியேறினர்.
வெலிக்கடைச் சிறையில் சிறைவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் ஐம்பத்திமூன்று பேர், சிறைச்சாலைக்குள் வைத்து இரண்டு கட்டங்களாக, மிருகத்தனமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டனர்.
தமிழ் மக்களுக்கெதிரான இந்த வன்முறை வெறியாட்டத்திற்கு வித்திட்டுவிட்டு, வேடிக்கை பார்த்த சிங்கள அரசு, சர்வதேச மனிதாபிமான அமைப்புக்களின் சுயாதீனமான நீதி விசாரணைக் கோரிக்கைகளை முற்றாக நிராகரித்தது.
மாறாக, வெலிக்கடைச் சிறையிலும், ஏனைய பகுதிகளிலும், இனப்படுகொலையை முன்னின்று நடத்திய சிங்களக் காடையர்களுக்கு, வீடுகள், வசதிகள் வழங்கி, தமிழர் தாயகப் பகுதியில் குடியேற்றியது சிங்கள அரசு.
இருபத்தெட்டு ஆண்டுகளுக்குமுன், தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கறுப்பு யூலைக் கொடுமைகளை தட்டிக்கேட்க மறந்த, சர்வதேச சமூகத்தின் பொறுப்பற்ற போக்கே, இன்று பன்மடங்கு கொடூரத்தை, கொடுமையை எம்மினம் முள்ளிவாய்க்காலில் அனுபவிக்க நேர்ந்தது.......

Thursday, 6 June 2013

ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி பொன்.சிவகுமாரன்.

ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி ஆவார். யாழ்ப்பாணம், உரும்பிராயில் காவற்துறையினரின் சுற்றி வளைப்பில் நஞ்சருந்தி மரணமடைந்தார். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் நஞ்சு அருந்தி உயிர் நீத்தவர் இவரே.
சிங்கள இனவாதத்தால் தமிழ் மக்களுக்கெதிரான கொடுமைகளும் படுகொலைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டு, தமிழ் மக்களின் சுதந்திர இருப்பு சிதைக்கப்பட்டது. இந்நிலையில் தான் அன்று மாணவனாகவிருந்த தியாகி பொன்.சிவகுமாரன், தமிழ் மக்களின் உரிமைகள் மீட்கப்படுவதற்கும் சுதந்திர இருப்பை உறுதிசெய்வதற்கும் ஆயுதப் போராட்டமே சரியான மார்க்கம் என்பதை உணர்ந்து சிங்கள இனவாதத்திற்கெதிராக ஆயுதமேந்திய போராட்டத்தை முன்னெடுத்தார்.
தமிழீழ மக்கள் மனங்களில் விடுதலைத் தீப்பொறியை இட்டுச்சென்ற அம்மாவீரனின் நினைவு நாள் இன்று யூன் 5.
யாழ் மண்ணின் உரும்பிராயில் பிறந்த சிவகுமாரன் அவர்கள் சிறு பராயத்திலிருந்தே அநீதிகளைக் கண்டு கொதித்தெழுகின்ற, அவற்றைத் தட்டிக்கேட்கின்ற இயல்புடையவர்.மக்கள் மீதான சிங்கள ஆட்சியாயர்களின் கொடுமை நிறைந்த ஒடுக்குமுறைக்கெதிராக போராட வேண்டுமென்ற துடிப்புடன் சிவகுமாரனால் மேற்கொள்ளப்பட்ட போராட்டச்செயற்பாடுகள் சரியான அரசியல் அடித்தளத்தைக் கொண்டவை. தொலைநோக்கு அடிப்படையில் அமைந்தவை.
தியாகி பொன்.சிவகுமாரனின் போராட்டச் செயற்பாடுகள் சிலவற்றை மீட்டுப்பார்ப்பதன் மூலம், தமிழ் மக்கள் மனங்களில், குறிப்பாக இளைஞர்கள் மனங்களில் விடுதலைக்கான பேரெழுச்சியை ஏற்படுத்திய அம்மாவீரனின் வரலாற்றை உள்வாங்கிக்கொள்ள முடியும். அதன் மூலம் தமிழ் மக்களின் விடுதலை வென்றெடுக்கப்பட்டு, அடிமைத் தழைகள் நீங்கிய வாழ்வமைய வேண்டுமென்பதற்காக போராடிய சிவகுமாரனின் இலட்சியத்தாகத்தின் ஆழத்தை அறிந்து கொள்ள முடியும்.
புரட்சியும் எழுச்சியும் இளைஞர் சமூகத்திடமிருந்து தான் தோற்றம் பெறுகின்றது. எனவே, தமிழ் மாணவர்களின் கல்வியைச் சீரழிப்பதன் மூலம் மக்களை எளிதாக அடிமைப்படுத்த முடியும் என்ற மூலோபாயத்தை சிங்கள அரசுகள் திடமாக நம்பி செயற்பட்டு வந்திருக்கின்றன. கல்வியில் பின்னடைவை ஏற்படுத்துவதன் மூலம் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை நசுக்கலாம், போர்க்குணத்தை மழுங்கடிக்கலாம், சுதந்திர உணர்வைச் சிதைக்கலாம் என்ற நோக்கத்தில் காலங்காலமாக அவை செயற்பட்டு வந்திருக்கின்றன. (இன்றைய காலத்தில்கூட பல பாடசாலைகளும் பாடசாலைகளை அண்டிய பகுதிகளும் இராணுவ முகாம்களாக இருப்பதைக் கூற முடியும்.)
தமிழ் மாணவர்களின் கல்வி மீது கத்தி வைக்கும் ஆரம்பக்கட்டம் ஆயிரத்துத் தொழாயிரத்து எழுபதுகளில், சிறிமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சிக்காலத்தில் தரப்படுத்தல் அமுல்படுத்தப்பட்டதோடு நிகழ்ந்தது. இது போன்ற அக்கிரமங்களை எதிர்த்துப் போராடும் இலக்கோடு உயர்கல்வி மாணவர்கள் ஒருங்கிணைந்த தமிழ் மாணவர் பேரவை தோற்றம் பெற்றது. 1971ல் தமிழ் மாணவர் பேரவையில் இணைந்த சிவகுமாரன் அவர்கள் சில தோழர்களை ஒருங்கிணைத்து சிங்கள அரசுக்கும் தமிழ்த் தேச விரோத சக்திகளுக்கும் எதிரான போராட்டத்தில் ஈடுபட்டார்.
கல்வித் தரப்படுத்தலை அமுல்படுத்திய சிறிமா அரசின் துணை அமைச்சராகவிருந்த சோமவீர சந்திரசிறி பயணம் செய்த வாகனத்திற்கு நேரக்கணிய வெடி வைப்பதோடு ஆரம்பமானது சிவகுமாரனது ஆயுதப்போராட்ட வரலாறு (செப் 1970). இச்சம்பவத்திலிருந்து சிங்கள அமைச்சர் உயிர்தப்பிய போதும், அச்சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டில் கைதான சிவகுமாரன் சிறையில் மோசமான சித்திரை வதைகளுக்குட்படுத்தப்பட்டார்.
தொடர்ந்து தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தை காட்டிக்கொடுக்கும் துரோகத்தனத்தை புரிந்து வந்த யாழ்-நகரமேயர் அல்பிரட் துரையப்பா மீதும் தாக்குதல் முயற்சிகளை மேற்கொண்டார் (பெப் 1971). அம்முயற்சிகளும் வெற்றியளிக்கவில்லை. துரையப்பா மீதான தாக்குதல் காரணமாக கொலை முயற்சிக் குற்றம் சுமத்தப்பட்டு, 3 ஆண்டுகள் கொடுமையான துன்றுத்தல்களுடன்கூடிய சிறைவாழ்க்கையின் பின்னர், தனது 23வது வயதில் விடுதலையானார். ஆனாலும் அவர் மனம் தளரவில்லை. மிகவும் உறுதியோடு போராட்டச் செயற்பாடுகளை முன்னெடுத்தார்.
மூன்று ஆண்டுச் சிறை வாழ்க்கையின் பட்டறிவு மூலம் போராட்டம் தொடர்பான பல நடைமுறை யதார்த்தங்களை சிவகுமாரன் உணர்ந்து கொண்டார். போராட்டச் செயற்பாடுகள் தொடர்பான இரகசியங்களை வரவழைப்பதற்காக சிங்களப் படைகளும் சிறிலங்கா காவல்துறையும் போராளிகள் மீது கோரமான சித்திரவதைகளை மேற்கொள்ளும் போது உண்மைகள் வெளிப்பட நேர்ந்தால் போராட்டத்திற்கு உதவுகின்ற மக்கள் இன்னல்களை எதிர்கொள்ள வேண்டிவரும், போராட்டத்தின் இலக்கு பாதிக்கப்பட்டு பின்னடைவு ஏற்படும், அத்தோடு போராட்டம் முளையிலேயே கிள்ளியெறியப்பட்டுவிடும் ஆகியனவே சிறை வாழ்க்கை மூலம் சிவகுமாரன் பட்டறிந்த யதார்த்தம். எனவே, எதிரிகளிடம் உயிருடன் பிடிபடும் சூழல் ஏற்படின் சயனைற் உட்கொண்டு உயிரைப் போக்கிக்கொள்வதன் மூலமே போராட்டத்தை முன்னகர்த்த முடியுமென்ற முடிவை எடுத்தார்.
போராட்ட முறைமையென்பது கொள்கைகளை முன்னிறுத்தி உரிமைகளை வென்றெடுப்பதற்கான வழியேயன்றி, போராட்ட முறைமையே கொள்கையாக வரித்துக்கொள்ள முடியாதென்பதில் உறுதியான கருத்தைக் கொண்டிருந்தார். எனவே,போராட்ட முறைமைகள் காலத்திற்கும் சூழலுக்குமேற்ப மாற்றமடைய வேண்டுமென்பதில் ஆழமானதும் தெளிவானதுமான கருத்தைக் கொண்டிருந்தார். தமிழ் மக்களின் அபிலாசைகளையும் உரிமைகளையும் நிலைநிறுத்தும் பொருட்டு அமைதி வழியில் மேற்கொள்ளப்பட்டு வந்த போராட்டங்களையும் பெரிதும் மதித்து ஏற்றுக்கொண்டார். சிறையில் இருந்த காலங்களில் உணவு மறுப்புப் போராட்டங்களை முன்னெடுத்தார்.
அத்தோடு தமிழ் மக்களுக்கெதிரான சிங்களத்தின் கொடுமைகளுக்கும் அநீதிகளுக்குமாக மட்டும் சிவகுமாரன் போராடவில்லை. தமிழ்ச் சமூகத்திற்குள் புதைந்திருந்த சமூக அடுக்குகளைப் பொசுக்கும் முயற்சிகளிலும் அவர் பின்நிற்கவில்லை. சாதியம், பெண் அடக்குமுறைப்போக்கு, மணக்கொடை போன்ற சமத்துவ வாழ்வுக்குப் புறம்பான போக்குகளையும் துணிந்து நின்று எதிர்த்தார்.
சிறிமா அரசானது, 1974 ஜனவரியில் யாழப்பாணத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட 4வது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டைக் குழப்பும் கீழ்த்தனமான நோக்கில் பல இடையூறுகளை விளைவித்தது. ஆனாலும் மாநாட்டு ஒழுங்கமைப்பாளர்களின் உறுதியான செயற்பாட்டால் மாநாடு பெரும் மக்கள் எழுச்சியுடன் நடந்தேறியது. இவ் வெற்றியின் பின்னணியில் சிவகுமாரன் மிகவும் உத்வேகத்துடன் செயற்பட்டார் என்பதும் வரலாற்றில் பதிவான ஒன்று.
பின்னர் மாநாட்டுக்கு வருகை தந்திருந்த வெளிநாட்டுப் பிரமுகர்களுக்கு பிரியாவிடை வழங்கும் நிகழ்ச்சியில் பொதுமக்கள் மீது சிங்களக் காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் 9 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். சிறிலங்கா காவல்துறையின் இந்த மிலேச்சத்தனமான படுகொலையை நேரில் கண்ட சிவகுமாரன் கொதித்தெழுந்தார். அப்படுகொலைக்கு உடந்தையாகவிருந்த உதவிக் காவல் அதிகாரி சந்திரசேகராவைப் பழிவாங்குவதற்கு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டார்.
சிவகுமாரன் விடுதலை என்ற உன்னத இலட்சியத்திற்காக உண்மையான அர்ப்பணிப்புடனும் தொலைநோக்குடனும் செயற்பட்டவர். தமிழ் மக்களின் விடியலுக்காக போராடிய தியாகி பொன்.சிவகுமாரன் அவர்கள் களச்செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த தருணத்தில் எதிரிகளால் சுற்றிவளைக்கப்பட்ட போது, எதிரிகளிடம் உயிருடன் பிடிபடக்கூடாது என்ற உயர்ந்த இலட்சியத்தைத் தாங்கி சயனைட் அருந்தி தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் தற்கொடையாளனாய் 1974ம் ஆண்டு யூன் 5ம் நாள் தியாகி பொன் சிவகுமாரன் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.
சிவகுமாரனின் வீரச்சாவு இளைஞர்களிடத்திலே ஒரு எழுச்சியை ஏற்படுத்தியது. சுடுகாட்டுக்குப் பெண்கள் முதன் முதலில் வந்த நிகழ்வாக அது அமைந்தது.
ஜூன் 6 ஆம் நாள் சிவகுமாரன் நினைவாக தமிழீழ மாணவர் எழுச்சி நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சுற்றுச் சூழல் நாள் ஜூன் 5 ஆம் நாள் வருவதால் அதற்கடுத்த நாள் சிவகுமாரன் நினைவு நாளாக ஆக்கப்பட்டது.
நன்றி
thesakkaatu

Thursday, 30 May 2013

புன்னகையைக் கடந்து, மனதின் வலிமைகளைத் தாண்டி.... 
கேள்விகளில் கசிந்த... அந்தத் துயர்படிந்த ஏக்கம், அங்குள்ள சுவர்களிலும் மரங்களிலும் சருகுகளிலும் பட்டுப் பரவி, 
ஒரு காலத்தை மீட்டும் மெல்லிய இசையென இன்னமும் கேட்டபடியே இருக்கிறது...! என் இதயத்தில் 
எந்த தொலைதுரம் போனாலும் சுடச் சுட அம்மா வடித்த 
சுடு சாதமும் 
பொரியலும் வறுவலும் 
தொட்டுக் கொள்ள 
துவையலுமாய் 
சுவையும் மணமுமாய் 
அறுசுவையாய் நகர்ந்த என் காலம் நிலவின் ஒளியில் 
ஒய்யாரமாய் அமர்ந்து 
உடன் பிறப்புகளுடன் 
ஓராயிரம் அளந்து...எங்கள் காட்டு வைரவர் கோயில் 
கிளாக்காய்....அரைகுறையாய் 
காய்ந்திருந்த பனங்கிழங்கும் 
நினைவினிலே வந்து 
பசி கிளப்ப 
பள்ளிக் கூட மணியும் 
பார்த்து ஒலிக்க 
துள்ளியெழுந்து ஓடுகையிலும்... ஆ எப்படி அந்த நினைவுகளை மறக்கமுடியும்.....
என் ஊரின் நினைவுகளை இன்னமும் என் கூடலுரின் பனையோலை சருகு சத்தம் கேட்டபடியே இருக்கிறது என் மனதில் 

Thursday, 23 May 2013

புலம்பெயர் தேசத்தில் புகலிடம் மறுக்கப்பட்ட ஒரு தமிழன் அந்நாட்டு நீதிமன்றத்தில் ஆற்றிய உரை!

18.05.2013- முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் புலம்பெயர் தேசத்தில் புகலிடம் மறுக்கப்பட்ட ஒரு தமிழன் அந்நாட்டு நீதிமன்றத்தில் உரையாற்றக் கிடைத்த வாய்ப்பில் அவர் பின்வருமாறு உரையாற்றினார். ஆங்கிலத்தில் அவர் ஆற்றிய உரையின் முழுமையான தமிழ் வடிம் பின்வருமாறு

இன்று மே-18, என் இன மக்களாகிய ஈழத்தமிழர்களின் இருண்ட நாளின் நான்காவது ஆண்டு நினைவு நாள்.

2009 ஆம் ஆண்டு என்பது, எமது மக்கள் படுகொலை செய்யப்பட்ட போது ஐக்கிய நாடுகளும் உலகமும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததால் ஒருபோதும் மறக்கப்பட முடியாத ஆண்டாக உள்ளது.

(மே-18) உலகெங்கும் வாழ்கின்ற தமிழ் மக்கள் இன்றைய நாளை அடையாளப்படுத்துவதற்காக எழுச்சி கொள்வார்கள். 21வது நூற்றாண்டின் முதலாவது இனப்படுகொலை இதுவென்பதை இந்த உலகம் விரைவாகவோ, காலம் தாழ்த்தியோ உணரத்தான் போகிறது.

தமது அண்மைய அறிக்கையில் (பெற்றி அறிக்கை) ஐக்கிய நாடுகள் தமது பயங்கரத் தவறுகளை ஏற்கெனவே ஏற்றுக் கொண்டுள்ளன. அத்துடன், 70,000 ற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என நம்பத்தகுந்த தகவல்கள் சுட்டிக்காட்டுவதாகவும் அது கூறியுள்ளது.

அவை சர்வதேச சமூகத்தில் மனிதநேயத்துக்கான எந்த அக்கறையோடும், நீதிக்கான எந்தக் கருசனையோடும் - பிரித்தானிய காலனித்துவ காலங்களிலிருந்து சிங்கள மேலாதிக்கத்திடம் பிரித்தானியாவால் ஆட்சி வழங்கப்பட்டதிலிருந்து 60 ஆண்டுகளாக மோசமாக-மோசமாக உருவாகி - 2009 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது மிக மோசமான உச்சக்கட்ட இனப்படுகொலைத் தாக்குதல் என்பதை விரைவாகவோ, காலம் தாழ்த்தியோ கற்றுக்கொள்வார்கள்.

இந்த இனப்படுகொலை முன்னெடுப்பின் காரணமாகவே புலம்பெயர் தமிழர்களுள் பலர் தாம் நேசித்த தாயகத்தை விட்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்டமை, உலக சமுதாயத்தின் மனிதாபிமானப் பரப்பால் இந்த உண்மைகள் உணரப்படும் வரை ஒருபோதும் ஓயாது.

அவர்களுள் ஒருவனாக நான். இந்த இனப்படுகொலையின் உச்சக்கட்டத்தை எனது குடும்பத்துடன் அனுபவித்தேன். எனது தந்தை கொல்லப்பட்டார். தாயார் முள்ளிவாய்க்காலில் காயம்பட்டார். நான்கு தடவைகள் நான் காயம்பட்டேன். எனது அம்மாவின் சகோதரியின் மகன் கொல்லப்பட்டார். மற்றுமொரு மகன் மோசமாகக் காயம்பட்டார்.

நாங்கள் உணவு இன்றி, தண்ணீர் இன்றி, காயங்களுக்கு மருந்துகள் இன்றி உயிர்வாழ முயற்சிப்பதற்காக நாங்கள் பதுங்குகுழிகளுக்குள்ளே மறைந்துகொள்ள வேண்டியிருந்தது. நாங்கள் பிழைக்க வேண்டியிருந்த அந்த கூட்டு வேதனைகளை இந்தக் குறுகிய நேரத்துக்குள் விபரிப்பது எனக்கு கடினம்.

இன்னும், நான்கு ஆண்டுகள் கடந்தும், எனது சகோதரனும் சகோதரியின் கணவரும் இலங்கைப் படையினரின் சிறைக்குள்தான் இருக்கிறார்கள். நான் பிறந்த மண்ணில் வாழமுடியாது, இலங்கைத் தீவை விட்டே வெளியேற்றப்பட்டிருந்தேன். இன்று அந்நிய நாட்டில் புகலிடத்துக்காக மன்றாடிக் கொண்டிருக்கிறேன். இதுதான் இலங்கையில் தமிழர்களின் நிலை.

நாங்கள் எங்களது கூட்டு சமூக கலாச்சார வாழ்க்கையை இழந்தோம், எங்கள் குடும்பங்களை இழந்தோம், எங்கள் தாய்நாட்டில் வாழ்வதற்கான உரிமையை இழந்தோம். வரலாற்று ரீதியாக நாங்கள் உண்மை பேசுகின்ற ஒரு மக்கள். தயவுசெய்து எங்களை உண்மை பேசவிடுங்கள். எங்களுக்குப் பாதுகாப்புக் கொடுங்கள், எனக்கு பாதுகாப்புக் கொடுக்கள் எனவேதான் என்னால் உண்மை பேசமுடியும்.

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான எனது தொடர்பை நான் உங்களிடமிருந்து ஒருபோதும் மறைக்கவில்லை. ஆனால், என்மீதான உங்களுடைய இந்தக் குற்றச்சாட்டு சற்று வித்தியாசமாக இருப்பதை நான் உங்களுக்கு கூறவேண்டியுள்ளது.

விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டு இன்று நான்கு ஆண்டுகள் கடந்துள்ளன. இந்த நான்கு ஆண்டு காலப்பகுதியில் உறுதியாகத் தமிழர்களிடமிருந்து எந்த ஆயுதச் செயற்பாடுகளும் இடம்பெறவில்லை.

இனப்படுகொலைத் தாக்குதலின் பலியாட்களாக நாங்கள் இருந்தும், தமிழர்கள் பயங்கரவாதிகளாக இருப்பதுபோல் வகைப்படுத்துவது சற்று வித்தியாசமாக இல்லையா? இலங்கை அரச ஆயுதப் படைகளை நீங்கள் எப்படி விபரிக்கப் போகிறீர்கள்?

உண்மையிலே மிகவும் வேதனையான விடயம் என்னவென்றால், என்னைப் பற்றி நீங்கள் உங்கள் மனதில் எழுப்பி வைத்திருக்கும் கேள்வி, பொதுவாகவே தமிழ் மக்கள் குறித்து உலகப் பொதுசனத்தின் மனதிலும் உள்ளது.

நான் என்ன கருதுகிறேன் என்பதை காட்டுவதற்காக நான் இணையத்தளத்தில் படித்த மிக அண்மையில் வெளியான ஒரு கட்டுரையை நான் இங்கே பயன்படுத்துகிறேன்.

'உருவறித் நிக்கோல் இலங்கையில் விடுமுறைகள் பற்றி எழுதுகிறார், பிரித்தானிய செய்தித்தாள் 'தி ஒப்சேவர்' இல் ஒரு 'Taxi' ஓட்டுநருடனான தனது கலந்துரையாடலை விபரிக்கிறார்.

'நீங்கள் ஒரு புத்த மதத்தவரா?' அந்த ஓட்டுநரிடம் நான் கேட்டேன்.
'இல்லை. நான் ஒரு இந்து.'
'ஓ, அப்படியானால் நீங்கள் தமிழனா?'
'ஆம். நான் ஒரு தமிழன்,' என்கிறார் ஓட்டுநர், பின்பு சத்தம்போட்டுச் சொன்னார், 'ஆனால், நான் ஒரு பயங்கரவாதி இல்லை!'

திரு.நிக்கோல் தனது கட்டுரையில் பின்வருமாறு கூறி நிறைவு செய்கிறார். அந்த ஓட்டுநர் ஒரு பயங்கரவாதி என ஒருபோதும் சிறுகணம் கூட நான் நினைக்கவில்லை, ஆனால், அவர் அதைக் கூறியதில் ஓர் உலகத்தின் வலியை நான் கேட்டேன்.

பிரித்தானியா இலங்கைத் தீவைவிட்டு வெளியேறியதிலிருந்து முதல் 30 ஆண்டுகளாக, தமிழர்கள் சிங்கள தேசத்திடமிருந்து தீவிர இனவாத வன்முறையை எதிர்த்து அமைதியான காந்திய வழிமுறைகளை மட்டும் பயன்படுத்தி போராடினார்கள்.

பாகுபாட்டுச் சட்டங்கள், தமிழ் தேயிலைத் தொழிலாளர்களின் குடியுரிமைகளைப் பறித்தல், தனிச் சிங்களச் சட்டம், தமிழ் மாணவர்கள் அதிக மதிப்பெண்களை எடுத்தால் மட்டுமே பல்கலைக் கழகம் நுழைய முடியும் என்ற கோரிக்கை, அரச ஆதரவோடு தமிழர் எதிர்ப்பு இனக்கலவரங்கள் - இவை அனைத்தும் அமைதியான ஆர்ப்பாட்டங்களை தமிழர்கள் மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தின் போதே நிகழ்ந்தன.

30 ஆண்டுகளாக அமைதி முறை ஆர்ப்பாட்டங்கள் மூலம் எதையும் அடைய முடியவில்லை என்பதை உணர்ந்து கொண்ட பிற்பாடு மட்டுமே தமிழர்களிடமிருந்து ஆயுதப் போராட்டம் ஆரம்பித்தது. 30 ஆண்டுகளாக பலத்தோடு பலம் சந்திக்க வைக்கக்கூடிய ஒரு நிலையில் இனவாதப் பயங்கரவாதம் தமிழர்களை நிறுத்தியது. போர் தமிழர்கள் மீது திணிக்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகள் சித்தரிக்கப்படுகின்ற முறையை நான் நிராகரிக்கிறேன் - குறிப்பாக மேற்குலக ஊடகத்தால். வெறிபிடித்தவர்கள் என்றும் தீவிரவாதிகள் என்றும் பயங்கரவாதக் குழு என்றும் சித்தரிக்கிறார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் உரிமைகளைக் காப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அறிவான, நவீன, முன்னோடியான இயக்கம். அது இலங்கைப் படைக்கு எதிராகப் போராடிய அதேவேளை, சாதி முறைமைக்கு எதிராகவும் பெண்கள் உரிமைகளுக்காகவும் மிகவும் கடினமாகப் போராடியது.

25 ஆண்டுகள் கொண்ட தீவிர சமச்சீரற்ற போரின் பின்னர், தமிழர்கள் ஒரு பலம்வாய்ந்த நிலையை அடைந்ததும், தமிழீழ விடுதலைப் புலிகள் என்ன செய்தார்கள்? சமாதான முன்னெடுப்பைத் தொடங்கினார்கள்! சர்வதேச நாடுகளின் கண்காணிப்பில் 2002 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சமாதான முன்னெடுப்பு தமிழர்களுக்கு ஒரு நம்பிக்கையான காலமாக இருந்தது.

சிங்களவர்களுக்கும் அது ஒரு நம்பிக்கையான காலமாக இருந்தது என நான் கேள்விப்பட்டேன். ஆனால், ஆரம்பத்தில் சமாதான முன்னெடுப்புக்கு முற்றுமுழுதான ஆதரவைக் காட்டிக்கொண்ட சர்வதேச சமூகம், அதன் நிலைப்பாட்டை மாற்றியது.

2003 ல் தமிழ் மற்றும் சிங்கள பேச்சுவார்த்தையாளர்கள் கைகளைக் குலுக்கிக் கொண்டிருந்த போது, உலகம் போரை நோக்கி வழிநடந்தது. இலங்கை சமாதான முன்னெடுப்பின் இணைத் தலைமை நாடுகளுக்குள் பிரதான இரு வலுவான நாடுகளுக்கிடையே பாரிய வேற்றுமைகள் நிலவின.

அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஈராக் போர் தொடர்பாக சர்ச்சையில் இருந்தன. இந்த சர்ச்சை இலங்கை சமாதான முன்னெடுப்பில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.

தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் சமாதானம் தேவைப்பட்டிருக்கலாம் - ஆனால், அமெரிக்காவும் பிரித்தானியாவும் விரிவடைந்து கொண்டிருந்த மத்திய கிழக்குப் போர்களில் - பயன்படுத்த சுதந்திரமாக இருப்பதற்காக - தமிழர் தாயகத்தில் உள்ள திருகோணமலை போன்ற மூலோபாயத் துறைமுகங்களில் அதிக ஆர்வத்தைக் காட்டின.

இந்த வல்லரசுகள் துறைமுகத்தை அண்மித்த பகுதியை விட்டு விடுதலைப் புலிகளை வெளியேற்றத் தேவைப்பட்டது என்பது வெளிப்படையானது. எனவே, சமாதான முன்னெடுப்பானது வெட்கமின்றி அமெரிக்க கூட்டு நாடுகளாலும் சிங்கள தீவிரவாத மேலாதிக்கவாதிகளாலும் திட்டமிட்டுத் தாக்கப்பட்டது.

சமாதான முன்னெடுப்புக்கான இறுதித் தாக்கமானது அமெரிக்காவும் பிரித்தானியாவும் விடுதலைப் புலிகளைத் தடை செய்ததிலிருந்து ஐரோப்பிய ஒன்றியம் மிகப் பெரிய அழுத்தத்துக்குள் உள்ளான போதே ஏற்பட்டது.

அமெரிக்காவும் பிரித்தானியாவும் விடுதலைப் புலிகளை வெறிபிடித்தவர்கள் என்றும் பயங்கரவாதிகள் என்றும் அழைப்பதற்கு ஒரு நீண்ட பாதை செல்வார்கள் என்பதை என்னால் விளங்கிக்கொள்ள முடியும்.

ஆனால், நன்றாக அறிந்துகொள்ள வேண்டிய ஏனைய நாடுகள் வெட்கமின்றி அமெரிக்க வரிசையைப் பின்பற்றுவது உண்மையிலே மிகவும் கவலையாக உள்ளது.

பயங்கரவாதியாக விபரிக்கப்படக்கூடிய எந்தச் செயற்பாட்டிலும் நான் ஈடுபடவில்லை என்பதை உங்களுக்கு என்னால் கூறமுடியும்.

மேலும், என்னால் கூறிக்கொள்ளக் கூடிய விடயம் என்னவென்றால், பொதுமக்களை மனிதக் கேடயங்களாகவோ அல்லது பலவந்தமாக சிறுவர்களை படையில் சேர்த்தல் போன்ற எந்தச் செயற்பாடுகளிலும் விடுதலைப் புலிகளின் எந்தப் பகுதியும் ஈடுபடுத்தப்பட்டது என்பதில் எனக்கு சிறுதுளி கூட அனுபவமில்லை.

இங்குள்ள ஒவ்வொருவரும் நான் சொல்லவேண்டிய விடயத்துடன் உடன்படுவார்களோ அல்லது விளங்கித் தன்னும் கொள்வார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை.

ஆனால், இந்த 21ஆம் நூற்றாண்டின் முதலாவது இனப்படுகொலையின் இந்த நான்காவது ஆண்டு நினைவு நாளில் - சற்று சுதந்திரமான ஆய்வைச் செய்யுமாறும் அத்துடன், புரிந்துகொள்ள முயற்சி செய்யுமாறும் நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

ஏனென்றால், என்னுடைய வழக்கு குறித்த ஒரு முடிவை நீங்கள் தற்பொழுது எடுக்கமாட்டீர்கள் - ஆனால், அதைக்காட்டிலும் ஏதோவொரு விடயத்தில் அதிகமாக முடிவுசெய்வீர்கள்.

நன்றி..இணையம்

Monday, 25 March 2013

தமிழீழ தேசியச் சின்னங்கள் பற்றிய பதிவு

 


தேசியம் என்பது மக்களின் சிறப்பான மன எழுச்சியாலும் செயற்திறனாலும் தோன்றி நிலைத்து நிற்கிறது தேசியம் என்பது உணர்வு மாத்தரமல்ல, உருவமும் கூட தேசியத்தின் உணர்வுக்கு உருவம் கொடுப்பவை தேசியச் சின்னங்கள் அவை காலத்தைக் கடந்து நிற்கின்றன.

எங்கள் உடைமைகள் அழிக்கப்பட்டாலும் உணர்வுகள் சிதைக்கப்படமுடியதவை அவை எமக்கான தேசியத்தோடு ஒன்றித்து விட்டவை 30 வருடதுக்குமேலான எமது தேசியம் எனும் இலக்கு இப்போது சிங்களம் நசுக்கிவிட்ட ஒன்றாகி போனது....என்றோ ஒருநாள் எமக்கான உரிமைக்காக காத்து நிற்கிறோம் கொடுக்கப்பட உயிர்களுக்கும் சிதைக்கப்பட்ட உரிமைகளுக்கும் நசுக்கப்பட்ட உணர்வுகளுக்கும் மாற்றிடு ஏது
அது எமக்கான தேசமே...




தேசியம் என்பது ஒரு இனத்தையும்,அந்த இனம் வாழும் இடத்தையும் குறிப்பிடுகிறது தேசியம் வலுவான சக்தி, தேசியச் சின்னங்கள் தேசியத்திற்குரிய முக்கியத்துவம் தேசியச் சின்னத்திற்கும் உண்டு.

தேசியம் என்ற கருப்பொருளுக்கு உருவம் கொடுப்பவை தேசியச் சின்னங்கள் என்று அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கொடி, தேசியப் பறவை, தேசிய மரம், தேசிய விலங்கு, தேசியப் பூ என்பனவாகும். தேசியத்தை வளர்த்த பிதாமகர்கள் இவற்றைத் தெரிவு செய்கிறார்கள்.

காலம் தனது வரலாற்றுப் பதிவை தேசியச் சின்னங்களுக்கு வழங்குகிறது தேசியச் சின்னங்கள் தேசியத்திற்கு நிகரானவை.தேசியம் என்பது உன்னதமான உணர்வு தேசியச் சின்னம் உணர்வின் உருவம்.

தேசியச் சின்னங்கள் எழுச்சி வடிவங்கள் அவை உருமாற்றம் செய்யப்படுவதில்லை தேசியத்திற்குரிய மக்கள் கூடும் இடங்களில் தேசியச் சின்னங்கள் முன்னிலைப் படுத்தப்படுகின்றன
தேசிய சின்னங்கள் மாறாது இருப்பதோடு மாற்றத்திற்க்கு உட்படாத வலுப் பொருளாகவும் இருக்கின்றன தமிழீழத்தின் தேசியக் கொடி புலிக் கொடி இறையாண்மை பெற்ற நாடுகளின் தேசியக் கொடிகள் ஆரம்பத்தில் நாட்டு மக்களின் ஒரு பகுதியினரின் கொடியாகவே தொடங்கியுள்ளன. பின்பு நாட்டின் கொடியாகப் பரிணமித்துள்ளன இது உலக நியதி.

ஈழத்தமிழர் தம் புலிக்கொடி முழு தமிழர்களின் தேசியக்கொடி இதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை. தேசிய நாட்கள் நிகழ்ச்சிகள் ஒன்று கூடல்கள் என்பனவற்றில் புலிக்கொடியை ஏற்றுவது பறக்க விடுவது நியாய பூர்வமானது அது உலக ஒழுங்கில் ஏற்றுக் கொள்ளப்படும் நிகழ்வு

இபொழுது புலம்பெயர் தேசத்திலும் தாய் தமிழ் நாட்டிலும் எமது தேசிய கோடிக்கு உயரிய அந்தஸ்து கொடுக்கப்படுகிறது...அண்மையில் தமிழ் நாட்டில் மாணவர்கள் இந்திய தேசத்துக்கு அகிம்சை மூலம் சவால் விட்டு வருகின்றனர் அவர்களின் அணைத்து நிகழ்வுகளிலும் எமது விடுதலை கொடியையும் தேசியத்தலைவரின் புகைப்படமுமே காணப்படுகிறது பாலச்சந்திரனின் அந்த புகைப்படம் உலகையே உலுக்கி கொண்டு இருக்கிறது
உலக புரச்சியளர்கள் சிங்களத்தின் மிருகத்தனத்தை பார்த்து வெட்கித்து கல்லறைக்குள் தம் தலைகளை சாய்த்து கொண்டு உள்ளனர்......எனவே எமது போராட்ட நிகழ்வுகளில் தேசிய கொடியினை சின்னங்களை பயன்படுத்துவது எமது எல்லோரின் கடமை ஆகிறது


ஈழத் தமிழர்களின் தேசியப் பறவை "செண்பகம்" தேசியமரம் "வாகை", தேசியப் பூ "கார்த்திகைப் பூ" தேசிய விலஙகு சிறுத்தை" இதனை எம் உறவுகள் வருங்கால சந்ததிகள் மறக்கக்கூடாது

மூத்த தலைமுறைக்கும் இளைய தலைமுறைக்கும் இடையில் தொடர்புப் பொருளாகத் தேசியச் சின்னங்கள் இடம்பெறுகின்றன. தேசியச் சின்னங்களின் சிதைவு தொடர்பின் சிதைவாக அமைகின்றன.

தாயகத்திற்கும் புலத்திற்கும் இடையில் நிலவும் உறவை வலுப்படுத்தும் பாலமாகத் தேசியச் சின்னங்கள் நிலவுகின்றன தமிழீழ விடுதலைப் போரின் அடிப்படை இலட்சியங்களைத் தாங்கி நிற்கும் உணர்வும் உருவமுமாகப் தேசியக் கொடியும் தேசியச் சின்னங்களும் விளங்குகின்றன தேசியக் கொடிக்கும் பிற தேசியச் சின்னங்களும் உரிய மதிப்பு வழங்குவது எமது கடமையாகும்.

Monday, 25 February 2013

எனது கிராமமும் - இன்றைய அவல நிலையும்.



கிராமம் என்று சொன்னவுடனேயே பலருக்கு (குறிப்பாக நகரவாசிகள்கிராமத்தை விட்டு வெகுநாட்களுக்கு முன்னரே வளியேறியவர்களுக்கு) நினைவுக்கு வருவது விவசாயம் விவசாயிகள்எல்லாம் ஏழை மக்கள்,படிப்பறிவு அதிகம் இல்லாதவர்கள் என்பதுதான்.முன்னர் காலங்களில் அப்படிதான் இருந்திருக்கும்சில வருடங்களுக்கு முன்னர் எனது கிராமம் அதற்கான அடையாளங்களோடு தான் இருந்தது. ஆனால் இன்றைய நிலை அப்படியில்லை காலங்களால் பெரும் மாற்றம் கண்டுள்ளது.. கிராமம் பற்றிய பார்வையில் புரிதலில் நிறைய மாற்றங்கள் கொள்ள வேண்டியுள்ளது.

ஆரம்ப நிலை மனித இனம் உணவுக்காக நாடோடியாய் சுற்றித் திரிந்து விலங்குகளை வேட்டையாடி, தானும் விலங்குகளால் வேட்டையாடப்பட்டு அல்லலுற்று அலைந்து கடைசியாய் ஓரிடத்தில் ஒரு குழுவாய் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு தன் உணவுத் தேவையை விவசாயத்தின் மூலம் நிறைவேற்றிக் கொண்டபோது தான் சேர்ந்து வாழக்கூடிய வழிமுறை பின்பற்றப்பட்டு இன்றைய கிராமம் என்ற பரிணாமத்தை அடைந்தது.


இந்த பூமியில் முதன் முதலாய் உருவான அமைப்பு கிராமம் தான். மக்களின் எண்ணிக்கையைப் பொருத்து அது சிறிதாகவோ பெரிதாகவோ அடையாளப்படுத்தப்பட்டது. அந்த சமூக அமைப்பில் அனைத்தும் பொதுவாய் இருந்தது ஆதி சமூகம் அமைக்கப்பட்டது முதலில் பொது உடைமை தத்துவத்தில் தான்  .
       






தொண்மை வாய்ந்த கிராம அமைப்பு  தான் இன்றைய மனிதனின் வேர். மனித இனம் இன்றைக்கு கிளைத்து எழுந்து நிற்பது இந்த வேர்களிலிருந்துதான். வேர்கள் எப்படி வெளியே தெரிவதில்லையோ அதைப்போல் கிராமங்களும் தன்னை வெளிக்காட்டாமல், தன் வலிகள், சுகங்கள்,சோகங்கள், இழப்புகள், ஏமாற்றங்கள் இப்படி எல்லாவற்றையும் தன்னுள் வைத்துக்கொண்டு இன்றும் ஜீவனுள்ள அமைப்பாய் இயங்கிக் கொண்டிருக்கிறது.
ஆத்மாக்களின் கடைசி புகலிடமாய் இருந்து கொண்டிருப்பது கிராமங்கள் தான் .
  

இப்படி இருக்கும் எண்ணற்ற இலங்கை  கிராமங்களின் வரிசையில்இலங்கை வரைபடத்தில் இன்னமும் இடம்பெறத் தகுதி பெறாத ஒரு கிராமம் தான் எனது கிராமம். 
    
யாழ்மாவட்டம் மாவட்டம், தீவுப்பகுதி ஊர்காவத்துறை  உட்பட்ட புளியங்கூடல்கிராமம் தான் அது.
      

எந்த விதத்திலும் முக்கியத்துவம் பெறாத இந்த கிராமம் முக்கிய நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகளை விட்டு விலகி உள் ஒடுங்கி  போதிய போக்குவரத்து வசதியற்ற நிலையில் தான் இன்னமும் இருக்கிறது.          
        
       

இங்கு விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் இந்த மக்களுக்கு தங்கள்  குழந்தைகள் குறைந்தபட்சம் ஆரம்பக் கல்வி பெறுகின்ற வசதி கூட இந்த கிராமத்தில் கிடையாது என்பதுதான் மிகவும் வேதனைதரும் விசயம். 
      
இங்கு புகையிலை மற்றும் இதர விவசாய பயிர்கள் பயிரிடப்படுகின்றது சுற்றிவர உவர் நீரினை கொண்ட ஒரு பிரதேசமாக இது விளங்குகின்றது பொதுவாக இயற்கையை மட்டும் நம்பி செய்கின்ற விவசாயம் தான் இங்கு உண்டு இது இயற்கையால் ஏமாற்றப்பட்ட இன்னலக்ளும் என் கிராமத்திற்க்கு உண்டு
எனது ஊரின் மிகச்சிறந்த எழுச்சியாக ஆலயங்களை சொல்லலாம் தீவுப்பகுதியில் புளியங்கூடல் அம்மன் ஆலயம் தல சிறப்பில் இரண்டாவது இடத்தினை பெறுகின்றது
அதனைசுற்றி பிள்ளையார் கோவில் வைரவர் கோவில் போன்றனவும் உள்ளன

இதே நேரம் தீவுப்பகுதியில் சிறந்த கல்வி கொண்டபிரதேசமாக வேலணைக்கு அடுத்தபடியாக எமது கிராமத்தினை சான்றோர்கள் சொல்வர்....இது இன்றைய சூழ்நிலையில் கேள்விக்குறியாக உருவாகி கொண்டு இருப்பதே வேதனையானது...
இலங்கையின் விவசாய கிராமங்கள் அந்தமக்களின் ஒற்றுமையான பங்களிப்பின் மூலம் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்து உள்ளன இன்றைய நவீனத்துவமும் கல்வி வளர்ச்சியும் அவற்றினை மேம்படுத்தி உள்ளன ஆனால் எமது கிராமத்திற்க்கு மட்டும் அது பொருத்தமானதாக அமையவில்லை என்பதே கவலை அளிக்கிறது
எனது மண்ணில் பிறந்தவர்கள் அதிகமானவர்கள் புலம்பெயர் தேசங்களில் வாழ்ந்து வருகிறார்கள் இவர்களின் போதுமான சிறுது பங்களிப்பு இருந்தால் எமது கிராமம் ஒளிபெற்ற தேசமாக மாறிவிடும் இதற்க்கு இலங்கையின் எத்தனையோ கிராமங்கள்உதாரணமாக  சொல்லலாம்
இன்று சமூக அறிவின் மட்டம் தொடர்ச்சியாகவும், மிக வேகமாகவும் வீழ்ச்சி கண்டு வருகின்றது. விவாதங்கள், விவாதத் தளங்கள் எங்கும் இதே கதிதான். சமூக நேசிப்புள்ள மக்கள் இளைஞர்கள் மற்றம் கண்டு வருகின்றனர்  சமூகத்தை புரிந்துகொள்ளும் முயற்சிகள் முற்றாகவே சிறுமைப்படுத்தப்படுகின்றது. சமூகத்தின் உயிர்த்துடிப்புள்ள ஆற்றல் உள்ள புரட்சிகர சமூக அறிவு கிடையாது.  இதற்கு இசைவான வகையில் சமுகத்தில் இடம்பெறும் ஒரு சில சம்பவங்களும் கரணம் ஆகி விடுகின்றது இது மாற்றம் இப்பொழுது அவசியம் ஆகின்றது உங்களால் எனது மண் என் மக்கள் என்று சொல்லுவதற்க்கு மிகச்சிறந்த ஒரு சமுகத்தை உருவக்குவதட்க்கு நிங்கள் கடமைப்பட்டு உள்ளீர்கள்... 

உதாரணமாக சொல்லப்போனால் எமது ஊரில் கல்வி கற்ற எத்தனையோ மருத்துவர்கள் இருக்கிறார்கள் இவர்கள் தங்களின் கல்வியினை முடித்து கொண்டு வேலை செய்பவர்கள் அகவும் இருக்கிறார்கள் ஆனால் நான் அறிந்த மட்டில் இவர்கள் புளியங்கூடலில் எந்தவிதமான சேவைகளையும் வழங்கியதாக தெரியவில்லை இவர்கள் நினைத்தால் மாதம் ஒரு தடவை இலவச மருதுவமுகமினை நடத்தலாம் ஏன் முன்வரவில்லை பட்டதாரி ஆசிரியர்கள் வேறு துறைகளில் பரிச்சியம் உடையவர்கள் எவரும் தங்களின் பாதைகளை இன்றைய இளைய சமுதயதிட்க்கு கட்டவில்லை என்பதே வேதனையான விடயமாக இருக்கிறது 
அதே போல் ஆலயங்கள் கிராமசேவைகளில் தங்களை ஈடுபத்த முன்வரவேண்டும் இருள் நிறைந்த கிராமம் வெளிச்சம் அடையும் எமது ஊரில் இருந்து இலங்கையின் கொடிய யுத்தம் இனமோதல்களால் தங்களின் முகவரிகளை தொலைத்து மண்வாசனை மறந்து அந்நிய தேசங்களில் முகங்களை இழந்து வாழ்பவர்கள் தங்களின் முகவரியினை மீண்டும் மண்மீது பதிக்க விரும்புகின்றனர் ஆனால் பலபேர் அவ்வாறு இல்லை மாதவருவையில் ஒரு 10 டொலரைகூட கொடுபதட்க்கு பலவாறு யோசனை செய்கின்றனர் பலபேர் தங்கள் பிறந்த ஊர்களை மறந்துவிட்டனர் ஆனால் முகநுல்களில் தங்களின் அடையாளங்களை வெட்டியான பேச்சுகள் மூலம் காட்டிவருகின்றனர் 


அல்லும் பகலும் நெருக்கித் தள்ளும் வாழ்வில் சுயநலத்தினால் உந்திப்பட்டு வாழ்ந்தால் நமக்கும் மந்தைகளுக்கும் என்ன வேறுபாடு? பின்னொரு நாளில் நான் இப்படிக் கழித்தேன் என்று நினைவு கூர்வதற்கு மந்தைகளிடம் ஏதுமில்லை. நானிலிருந்து விடுபட்டு நாமுக்காக வாழ்வதே வாழ்க்கையின் முழுமையை ஒளியூட்டி உணர்த்துகிறது. இது மதவாதிகள் கூறும் ஆன்ம விடுதலை என்ற சொர்க்கத்தின் இன்பத் திறவுகோலல்ல. சமூகவிடுதலைக்காக தன்னை இழந்து தம்மை மீட்கும் மனிதகுலத்தின் ஆகப்பெரும் கனவு.  இந்த கனவிட்க்கு நனவை கொடுக்கின்றபோது எனது கிராமத்தின்  அடுத்த தலைமுறையில் வரும் மனிதர்கள் இந்த இருட்டு குகைகளின் தடையை நம் ஒளியால் கடக்கிறார்கள். 

அதேபோல்உண்மையில் மேடைப் பேச்சுக்களில் மற்றும் முகனுள் பக்கத்தில்  `மானிடத்தை நேசிக்கிறோம்' என கதையளப்பவர்கள் தம்மை 
 மனிதநேயம் மிக்கவர்களாக இனங்காட்ட பிரயத்தனப்படுகிறார்கள். இவர்கள் சொற்களில் மாத்திரம் இல்லாமல் வாழ்விலும் மனிதத்தை கடைப்பிடிக்க வேண்டும்.அப்போதுதான் ஒன்றுபட்ட ஒரு சமுக அமைப்பை  உருவாக்க முடியும் 

இப்பொழுது சில சக்திகளால் கிராமம் துளிர் விடதொடங்கி உள்ளது இலவசகல்வி நிலையம் நடத்தப்படுகிறது நல்ல படித்த சந்ததி உருவாக்கப்படுகிறது இநோருநாளில் எனது கிராமம் நிமிர்ந்து நிக்கும் என்பதில் மாற்று கருத்துகள் இருக்கப்போவதில்லை ஆனால் இதன் வேகம் வளர்ச்சி என்பது குறைவானது போதிய மூலதனம் இல்லாததே காரணம் ஆகின்றது ஊரின் வளர்ச்சியில் ஆர்வம் உள்ளவர்கள் 

சமுகத்தின் மீது பற்று கொண்டவர்கள் முன்வரவேண்டும் 
சமூகத்தின் கூட்டு பங்களிப்பும், வழிகாட்டும் பொது விவாதங்களும் அவசியமானதாக உள்ளது. சமூகம் தன்னைத்தான் அமைப்பாக்குவதன் மூலம்தான், இவை போன்றவைகளை சரியாக முன்னெடுத்து வழிநடத்த முடியும்.


ஒன்றுபடுவோம்... திட்டமிடுவோம்... செயல்படுவோம்...

Tuesday, 8 January 2013

புளியங்கூடல் வடக்கு வீதி அண்மையில் புனரமைக்கபட்டது ...

 கிராமிய வீதி புனரமைப்பு எனும் தொனி பொருளில் தீவகத்தின் சில வீதிகள் பிரதேசசபையின் நிதி உதவியுடன்
அமைக்கப்பட்டு வருகிறது.....அந்த வகையில் புளியங்கூடல் வடக்கு வீதி அம்மையில் புனரமைக்கப்படது...2007 ஆண்டு காலப்பகுதியில்
புளியங்கூடல் வடக்கு வீதி மற்றும் தெற்க்கு வீதிகள் புளியங்கூடல் மக்களின் உதவியுடன்....ஊரீ மண் போட்டு புனர் அமைக்கப்பட்டு இருந்தன பின்னர்
2010 ஆண்டு சேவாலங்கா வின் உதவியுடன் மீண்டும் செப்பனிடப்பட்டது குறிப்பிட தக்கது......