Saturday, 21 September 2013

நாங்கள் உணர்வினை இழக்கவில்லை....

ஒரு விடுதலைப் போராட்ட வரலாற்றை ஓரிரு ஆண்டுக்குள் அழித்துவிட்டு  தமிழர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறிய சிங்கள அரசுக்கு கடந்த பல சகாப்தமாக விடுதலைக்காக ஏங்கித் தவிக்கும் எம்  இனத்துக்கு…. தொடர்ச்சியான அடக்குமுறைக்கும்…. அடிமைத்தனத்திற்கும் பலியாகிக் கொண்டிருக்கும் என் சமூகத்துக்கு    எத்தனை சலிப்பும், எத்தனை எரிச்சலும், எத்தனை ஏமாற்றமும் இந்த இனவாத அரசு மேல் இருந்து இருக்கும் ?

இன்று ஈழமக்களின் தலைமைபீடம் இல்லாத நிலையில் யாரை நம்புவது என்பது தெரியாமல் இருந்த மக்கள் இன்று தமிழ் தேசியத்தை வெல்ல வைத்திருப்பதன் மூலம் நாம் சிங்களத்தின் அதனூடு சேர்ந்து இயங்கிய ஒட்டு குழுக்களுக்கும் அடிபணியாது அவர்கொடுக்கின்ர அற்ப சொற்ப்ப சலுகைகளுக்கு அடிபணியாது மக்கள் இன்று மிகப்பெரிய அரசியல் வெற்றியை ஈட்டி இருக்கிறார்கள் நாங்கள் இன்னும் உணர்வோடுதான் இருக்கிறோம் என்பதை உலகுக்கு பறைசாற்றி உள்ளது

எனக்கு தெரிந்து ஊர்காவற்துறை தேர்தல் தொகுதியில் விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் கூட இவ்வாறு வெற்றி பெற்றது கிடையாது அது EPDP கோட்டை எனசொல்லப்பட்டது இன்று நிலைமை தலைகிழ் இன்று ஒட்டு மொத்த தமிழ் இனத்தின் வேண்டுதல் உரிமை என்பதுதான்

இன்று இலங்கை அர­சாங்­க­மா­னது சர்­வ­தே­சத்தின் முன்னால் குற்­ற­வாளிக் கூண்டில் நிறுத்­தப்­பட்­டுள்­ளது. தமிழர்கள் கேட்பது உரிமை எங்களை நாங்கள் ஆளும் வாழ்க்கை என்பதை இப்போது சர்வதேசம் புரிந்து இருக்கும்  இந்தச் சந்­தர்ப்­ப­மா­னது இலங்­கையில் தமிழ்த் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வை அடை­வ­தற்­கான இரா­ஜ­தந்­திரசந்­தர்ப்­ப­மா­கவும் வடக்கு உட்­பட தமிழ்­பேசும் மக்கள் தேசத்தில் இரா­ணுவ ஆக்­கி­ர­மிப்­பையும் ஆதிக்­கத்­தையும் ஒழிப்­ப­தற்­கான சிறந்த சந்­தர்ப்­ப­மா­கவும் அமைந்­துள்­ளது.
இன்று வெற்றி   பெற்றவர்கள் அதற்கான வழிமுறைகளை கையாண்டு எங்கள் நம்பிக்கையை காப்பாற்றுவீர்கள் என நம்புகிறோம்
இரத்தம் சிந்தப்பட்ட மண்ணில் அதன் வடுக்கள் ஆறும் முன்னே தமிழ் மக்கள் இன்னோர் முறை எமக்கான உரிமையை சர்வதேசதிட்க்கு பறை சாற்றி உள்ளார்கள் சர்வதேசம் இந்த சந்தர்பத்தையும் தட்டி கழிக்காமல் தமிழர்களுக்கான உரிமைகளை பெற்று தர வேண்டும்

விடுதலைப்புலிகள் இருந்தகாலத்தில் அவர்களை பயங்கரவாதிகள் என்று புறம்தள்ளி எம் மக்களையும் எம் விடுதலை போராட்டத்தையும் அழித்த உலக சமுதாயம் இம்முறை எம்மால் எம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட எங்களின் அரசியல் தலைவர்களோடு கலந்து பேசுவதில் எந்த இடர்பாடும் இருக்க போவதில்லை எனவே எமக்கான உரிமை இந்த தேர்தல் மூலம் உலக்குக்கு உணர்த்தப்பட்டுள்ளது





No comments:

Post a Comment